முகப்பு :: நமது சங்கம் ::  முன்னாள் தலைவர்கள் :: நிர்வாகக்குழு உறுப்பினர்கள் :: செயற்குழு உறுப்பினர்கள் :: மாவட்ட சங்கங்கள் :: கிளைச்சங்கங்கள் ::  தொடர்புக்கு

நமது சமுதாயம் ::  நமது குலக் கொடி ::  நமது உறுதி மொழி :: நமது சங்க விதி முறைகள் :: செங்குந்தமித்திரன் :: செங்குந்தர் மாளிகை ::  வள்ளல் சபாபதி பள்ளி

 

செங்குந்தர் மாளிகை


சுமார் 65 ஆண்டுகளுக்கு முன் வள்ளல் தி.நா. சபாபதி முதலியார் அவர்கள் மதராஸ் பளையகாட் கம்பெனி சென்னையில் கட்டிடம் வாங்கியபோது, தொலைநோக்கு சிந்தனையுடன், மதராஸ் பளையகாட் கம்பெனியின் சார்பில் தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்திற்கும் சேர்த்து, சென்னை அரண்மனைக்காரன் தெருவில் 31(89) ஆம் எண்ணுள்ள கட்டிடத்தை வாங்கியுள்ளார். அதில் சில மாற்றங்களைச் செய்து செங்குந்தர் மாளிகை எனப் பெயரிட்டு 15-09-1939ல் திறப்பு விழா நடைபெற்றது. 

அம்மாளிகையை கட்டி தற்போது சுமார் 100 ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டதால், அது பழதாகி இடிந்து விழும் நிலை ஏற்பட்டது. இதையுணர்ந்த செங்குந்த சமுதாயத்தினர்கள் அம்மாளிகையை இடித்துவிட்டு, தானாகவே முன்வந்து சமுதாய உணர்வுடன் வாரிக்கொடுத்த வள்ளல்களின் நிதி உதவியைக் கொண்டு, சுமார் 60 இலட்சம் செலவில், புதிய செங்குந்தர் மாளிகை எழுப்பி அதனை 18-01-2004 ஞாயிற்றுக்கிழமை காலை தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தலைவர் திரு. ஜெ. சுத்தானந்தன் பி.எஸ்.சி., அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. இக்கட்டிட நிதிக்கு சேலம் மாவட்ட செங்குந்த மகாஜன சங்கம் மட்டும், தானாகவே ரூ.2 லட்சம் 2001 ஆம் ஆணடிலேயே செலுத்தியுள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

 

 
 

© 2015 Sengunthamithiran. All Rights Reserved

Best viewed with Internet Explorer Ver IE 6.5 & above or Google Chrome, Mozilla Firefox with a resolution of 1024*768. Please upgrade your browser.